உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கத்தில் படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2022-07-07 06:55 GMT   |   Update On 2022-07-07 06:55 GMT
  • ஊரப்பாக்கத்தில் சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கூடுவாஞ்சேரி:

ஊரப்பாக்கம் அடுத்த நேதாஜி அய்யஞ்சேரியில் வசித்து வருபவர் நிரஜ் பூசன். இவரது மகள் ஷிவானி தனுக்(வயது14). ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார்.

அவர் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி ஷிவானி தனுக், வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஷிவானி தனுக் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News