உள்ளூர் செய்திகள்

அவினாசி தனியார் பள்ளியில் இறைவணக்க நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

Published On 2023-08-14 06:59 GMT   |   Update On 2023-08-14 06:59 GMT
  • உடல்நிலை பாதிப்பு காரணமாக மாணவி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி எம். நாதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கந்தேஸ்வரி (வயது 14). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த கந்தேஸ்வரி, இறைவணக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆசிரியர்கள் மீட்டு அவிநாசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கந்தேஸ்வரி உயிரிழந்தார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News