உள்ளூர் செய்திகள்

எண்ணூரில் 7-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-07-04 07:00 GMT   |   Update On 2022-07-04 07:00 GMT
  • பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சிறுமி சோனியா கூறியுள்ளார். இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
  • இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி சோனியா வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தார்.

திருவொற்றியூர்:

எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் சோனியா (வயது 11). ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சிறுமி சோனியா கூறியுள்ளார். இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி சோனியா வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சோனியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News