உள்ளூர் செய்திகள்

திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டையில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது

Published On 2023-06-24 06:10 GMT   |   Update On 2023-06-24 06:10 GMT
  • காட்டு விலங்குகளான பன்றி முயல் மற்றும் புறா, கொக்கு ஆகியவற்றை வேட்டையாடி வருவது தெரியவந்தது.
  • கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருத்தணி:

ஆர்.கே. பேட்டையில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன், ராம்குமார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், சேகர், ரவி என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் அவர்களிடம் அனுமதி பெறாத நாட்டு துப்பாக்கி கையில் இருப்பது தெரியவந்தது.

இவர்கள் காட்டு விலங்குகளான பன்றி முயல் மற்றும் புறா, கொக்கு ஆகியவற்றை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 5 பேரை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News