உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் பா.ம.க.பிரமுகர் கொலையில் 4 பேர் கைது

Published On 2023-07-12 09:18 GMT   |   Update On 2023-07-12 09:18 GMT
  • இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தனர்.
  • விஜிக்கு இடதுகை, கால் முறிந்தது. சூர்யாவுக்கு வலது கால் முறிந்து போனது.

செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ்.பா.ம.க. நகர செயலாளராக இருந்த அவர் கடந்த 9-ந்தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அஜய் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மேலும் சூர்யா, காவூர் விஜி, கார்த்திக் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் சூர்யா, காவூர் விஜி ஆகியோரை தனிப்படை போலீசார் மாமண்டூர் பாலாற்று பாலத்தில் வைத்து சுற்றிவளைத்து பிடித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் விஜிக்கு இடதுகை, கால் முறிந்தது. சூர்யாவுக்கு வலது கால் முறிந்து போனது. அவர்களை போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News