உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 30 சவரன் நகை பறிப்பு

Published On 2022-06-06 16:11 IST   |   Update On 2022-06-06 16:11:00 IST
  • கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 5 பெண்களிடம், 30 சவரன் நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
  • நகையை பறி கொடுத்த பெண்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

சிதம்பரம்:

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர், முத்தையா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பங்காரு அடிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

விழாவில், புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் மக்கள் குவிந்ததால், நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சரியான நடவடிக்கை எடுக்காததால், மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி திணறினர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 5 பெண்களிடம், 30 சவரன் நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்றனர். நகையை பறி கொடுத்த பெண்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அண்ணாமலை நகர், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News