அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு
செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தல்
அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வந்தார். நீதிபதி வருகையைத் தொடர்ந்து திமுக வழக்கறிஞர்களும் வந்தனர். செந்தில் பாலாஜியின் சிகிச்சை தொடர்பான விவரங்களை நீதிபதி கேட்டறிகிறார்.
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க இருந்தது. இந்நிலையில் சக்திவேல் நீதிபதி விலகியுள்ளார்.
செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல்
செந்தில் பாலாஜி உதவியாளர் கோகுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளுக்கு சீல் வைப்பு
இ.எஸ்.ஐ. மருத்துவக்குழு ஓமந்தூரார் மருத்துவமனை சென்று ஆய்வு செய்தது. மருத்துவக்குழு அறிக்கை இ.எஸ்.ஐ, முதல்வருக்கு அளிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.