- ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல் என்கிற ரீதியில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை பேச வேண்டிய சூழல் உள்ளது.
- ஊழலுக்கு துணை போவதாக எழும் விமர்சனத்தை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.
ஆம் ஆத்மி அரசு மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படும் சூழல் ஆகியவற்றால், ஆம் ஆத்மி கட்சி, 'இந்தியா' கூட்டணிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழல் வழக்குகள், 'இந்தியா' கூட்டணிக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல் என்கிற ரீதியில், 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை பேச வேண்டிய சூழல் உள்ளது. பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.
ஆனால், காங்கிரஸ் உட்பட, 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுக்கவில்லை. ஆம் ஆத்மிக்கு ஆதரவாக கடுமையாகக் குரல் எழுப்பவில்லை.
அதாவது, ஊழலுக்கு துணை போவதாக எழும் விமர்சனத்தை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அதேசமயம், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியை கூட்டணி யில் இருந்து விலக்கவும் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. துப்புரவும் முக்கியம். அதற்கு துடைப்பமும் முக்கியமாச்சே! என்ற கதையில் உள்ளது.