பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தேக்கு மரக்கன்றுகள் வழங்கல்
- பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்‘ திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது.
- ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் உழவர் நலத்துறை மூலம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்ப டுத்த, வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலா கவோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும். மேலும் இந்த ஆண்டில் 22,500 செம்மரம், மகோகனி, சந்தனம், சிசு மரம் ஆகிய மரங்கள் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.