உள்ளூர் செய்திகள்

விழாவில் கலெக்டர் சாருஸ்ரீ விளையாட்டு குழுக்களுக்கு உபகரணங்கள் வழங்கினார்.

திருவாரூரில், விளையாட்டு குழுக்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

Published On 2023-02-19 09:39 GMT   |   Update On 2023-02-19 09:39 GMT
  • சமுதாய வளர்ச்சிக்கான இளையோர் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.
  • பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்.

திருவாரூர்:

திருவாரூரில் தலைமைத்தும் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான இளையோர் பயிற்சி கடந்த 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற்றது. இப்பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழினையும், விளையாட்டுக் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்வில், நேரு யுவ கேந்தராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் ராஜகுமார், பொருளாளர் பாலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News