உள்ளூர் செய்திகள்

கோவையில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி- சூப்பர்வைசர் சிக்கினார்

Published On 2022-08-11 09:23 GMT   |   Update On 2022-08-11 09:23 GMT
  • கணவர் துபாயில் வேலை பார்த்து வருவதால் பெண் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
  • பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் வாலிபர் வசித்து வருகிறார்.

கோவை:

கோவை வடவள்ளி அருகே உள்ள வீர கேரளத்தை சேர்ந்த 40 வயது இளம்பெண்.

இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். பெண் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் பாலகுமார் (வயது 31) என்பவர் வசித்து வந்தார். இளம்பெண் கணவர் இல்லாமல் இருப்பதை அறிந்த அவர் அடிக்கடி சைகைகள் காட்டி ஆபாசமாக பேசி வந்தார்.

சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் பாலகுமார் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை கட்டி பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். இதனையடுத்து பாலகுமார் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து இளம்பெண் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கட்டி பிடித்து தவறாக நடக்க முயன்ற பாலகுமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை ைகது செய்தனர். பின்னர் போலீசார் பாலகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News