உள்ளூர் செய்திகள்

பால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-06-27 07:54 GMT   |   Update On 2022-06-27 07:54 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மாவுருட்டி பகுதியில் பால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்நிலையில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மாவுருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சீனிவாசன் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அருகில் உள்ள வேப்பமரத்தில் சீனிவாசன் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பரமத்தி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News