உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் 'திடீர்' மழை

Published On 2023-02-28 10:08 GMT   |   Update On 2023-02-28 10:08 GMT
  • டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது.

தஞ்சாவூர்:

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கும் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்தது.

திடீரென பகல் 12 மணியளவில் தஞ்சையில் மிதமான சாரல் மழை ெபய்தது.

இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

Tags:    

Similar News