உள்ளூர் செய்திகள்

ஆய்வு கூட்டம் நடந்தது.

கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Published On 2022-08-29 08:52 GMT   |   Update On 2022-08-29 08:52 GMT
  • கூட்டத்தில் கும்பாபிஷேகத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
  • பெண்கள் அதிக நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் மற்றும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் சாய் தேசம் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோவில் அமை ந்துள்ளது.

சாய்தேசம் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

ஸ்ரீஷீரடிசாய்பாபா கோவில் கும்பாபி ஷேகத்தை யொட்டி சிறப்பு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டம் ஆர்வி கருணாநிதி அறக்கட்டளைதலைவர் தலைமையில் நடைபெற்றது.

எல்.ராகவன் ஆடிட்டர் ஆர்வி ராஜே ந்திரன் செயலாளர் சிறப்புவிருந்தினர் செல்வி பாரதி அமைப்பாளர், டி.எ.ஸ்பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர். வி.கே. ராம் பிரசாத், பொருளாளர் வி.துரை மற்றும் லயன் அங்கை ராஜேந்திரன் உள்பட பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கும்பாபிஷேகத்தன்று கோவி லுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கும்பாபிஷே கத்துக்கு வரும் பெண்கள் அதிக நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவது அவசியம்என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்த போதிய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது.

முன்னேற்பாடு கருதி 108 ஆம்புலன்ஸ், தீயணை ப்பு வாகனங்களைதயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

Tags:    

Similar News