உள்ளூர் செய்திகள்

தேர்வான மாணவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வாழ்த்தினார்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வான மாணவிகள் தஞ்சை கலெக்டருடன் சந்திப்பு

Published On 2022-11-23 10:33 GMT   |   Update On 2022-11-23 10:33 GMT
  • மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிற குழந்தைகளை கலெக்டர் அவரது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினார்.
  • விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன் செய்திருந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்ற குழந்தைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினார்.

இந்த விழாவை அறிவியல் இயக்க மாநில துணை தலைவர் பேராசிரியர் டாக்டர்.சுகுமாரன் தலைமை யேற்று நடத்தினார்.

முதன்மை கல்வி அலுவலர்சிவக்குமார்மு ன்னிலை வகித்தார்.இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளி மாணவிகள் ஆராதனா , அபர்னிகா. பயிற்சி ஆசிரியை பிரியதர்சினி, மற்றும் தலைமை அறங்காவலர் தோழர்.சோமசுந்தரம் தாளாளர் தோழர்.ஜி.பாலசந்திரன், அறங்காவலர் தோழர்.சொக்கலிங்கம், ஆகியோர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன் செய்திருந்தார்.

Tags:    

Similar News