உள்ளூர் செய்திகள்

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை படத்தில் காணலாம்.

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திண்டிவனம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2023-07-27 07:28 GMT   |   Update On 2023-07-27 07:28 GMT
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர்.
  • கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விழுப்புரம்:

திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல இன்று கல்லூரிக்கு வந்தனர். காலை 10 மணியளவில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒன்று கூடினர். மணிப்பூரில் பெண்கள் மீதான கூட்டு பலாத்கார வன்கொடுமை செய்தவர்களை கண்டித்தும், இதற்கு காரணமாக இருந்த மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News