உள்ளூர் செய்திகள்

கோவையில் பூஜை அறையில் தூக்கு போட்டு மாணவி தற்கொலை

Published On 2023-10-05 14:07 IST   |   Update On 2023-10-05 14:07:00 IST
  • போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை ரத்தினபுரி அருகே உள்ள பழனிசாமிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சியாமளா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News