உள்ளூர் செய்திகள்

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் காவேரிப்பட்டணம்

Published On 2023-05-17 15:15 IST   |   Update On 2023-05-17 15:15:00 IST
  • கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் குறித்த நேரத்திற்கு கிராமங்களுக்கு செல்லமுடியாத அவலநிலை உள்ளது.
  • நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை என்பதால் நெடுஞ்சாலைத் துறையினர் அவ்விடத்தில் இது ஒரு வழி பாதை என போர்டு வைக்க வேண்டும்.

 காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரில் முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியாகவும், சேலம் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி சாலை, பனகல் தெரு மற்றும் அகரம் சாலை நான்கும் சந்திக்கும் முக்கிய இடமாக பிள்ளையார் கோவில் நான்கு ரோடு அமைந்துள்ளது.

இவைகளில் தான் துணிக்கடைகள், நகை க்கடைகள், மருத்துவ மனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் காவேரிப்பட்டணத்தை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் நகருக்குள் வர வேண்டும் என்றால் இச்சாலைகளின் வழியாகத்தான் வரவேண்டும்.

இந்த சாலைகளில் பேருந்துகளை தவிர மற்ற வாகனங்களான டாடா ஏஸ், பால்வண்டிகள், லாரிகள், டிராக்டர்கள், பள்ளிபேருந்துகள், கார்கள், மேக்ஸி கேப், உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இந்த சாலையில் இருபுறமும் விதிகளை மீறி செல்வதால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் இரண்டு திசைகளிலும் வண்டிகள் நிற்க வேண்டியுள்ளது. பனகல் தெரு மற்றும் அகரம் சாலையை டாடா ஏஸ், பால் வண்டிகள், டிராக்டர்கள் செல்வதற்கும், வருவதற்கும் பயன்படுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் காலை நேரங்களில் அவசரமாக பணிக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இச்சாலைகளின் வழியாக கிராமங்களுக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் குறித்த நேரத்திற்கு கிராமங்களுக்கு செல்லமுடியாத அவலநிலை உள்ளது.

இதனால் இந்த சாலைகளை பயன்படுத்தி மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள், பொருட்கள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இச்சாலைகளில் எதிரெதிரே வரும் வாகனங்களின் ஒட்டுநர்கள் இடையேவாய்ச் சண்டை ஏற்பட்டு, வீண் தகராறுகள் ஏற்படுகிறது. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது காவேரிப்பட்டணம் நகருக்குள் வருவதை தவிர்த்து கொசமேட்டிலிருந்து ரவி தியேட்டர், ஸ்ரீராமுலுநகர், பாலக்கோடு சாலை வழியாக சேலம் மெயின் ரோடுக்கு வருவதற்கு வழி உள்ளது.

ஆனால் டிராக்டர், டாட்டா ஏஸ், பால் வண்டி, கார், மேக்ஸி கேப் போன்ற வாகனங்கள் வேண்டுமென்றே பனகல் தெருவில் வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கொசமேட்டிலிருந்து பனகல் தெருவுக்கு வருவதை தவிர்க்க கொசமேட்டிலேயே காவல் துறையினர் வைத்திருந்தனர். ஆனால் அதை தற்போது எடுத்து விட்டனர்.

இதனால் அனைத்து வண்டிகளும் இவ்வழியாகவே வருகின்றன. இந்த சாலை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை என்பதால் நெடுஞ்சாலைத் துறையினர் அவ்விடத்தில் இது ஒரு வழி பாதை என போர்டு வைக்க வேண்டும்.

மேலும் போக்குவரத்து காவல்துறை யினரால் அவ்விடத்தில் பேரிகார்டு வைத்தும் அந்த இடத்தில் நிரந்தரமாக காவலர்களை அமர்த்தலாம். அப்படி இல்லை என்றால் ஒரு வழிப்பாதையில் வேண்டு மென்றே வரும் வண்டிகளுக்கு சேலம் மெயின் ரோட்டில் உள்ள விநாயகர் சிலை அருகே அபராதம் விதித்தால் பனகல் தெரு வழியாக வண்டிகள் வருவது தவிர்க்கப்படும். மேலும் காவேரிப்பட்ட ணத்தில் போக்குவரத்து போலீசார் குறை வாக இருப்பதால் இந்த பகுதியில் போக்குவரத்தை சரிசெய்ய காவலர்கள் நிற்பதில்லை. எனவே அதிகமான போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என கூறினர்.

Tags:    

Similar News