உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி: இருமத்தூர் ஐ.வி.எல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-08-05 09:53 GMT   |   Update On 2022-08-05 09:53 GMT
  • ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குத்து சண்டையில் சாதனை படைத்தனர்.
  • பாத்திமா முதலாமிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மத்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் பண்ணை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் பாக்ஸிங் அஸோஸியேஷன் நடத்திய மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் இருமத்தூர் ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பாத்திமா முதலாமிடமும், ஹேமபிரனீத்,தீபிகா, ஈஸ்வர் இரண்டாமிடமும்,கபிலன் மூன்றாமிடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன் ,சுகன், அர்ச்சுனன் ஆகியோரையும் பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் கோவிந்தராஜ், செயலாளர் ஜெயந்திவெங்கடேசன், பள்ளியின் முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் ரகுபதி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

Tags:    

Similar News