உள்ளூர் செய்திகள்

புனித ஆரோக்கிய மாதா பேராலயம்.

புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Published On 2022-08-10 09:32 GMT   |   Update On 2022-08-10 09:32 GMT
  • பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது.
  • சி.சி.டி.வி கேமரா அமைத்தல், உயர்கோபுரம் அமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம்மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி பேராலய ஆலய முகப்பில் புதுப்பிக்கும்பணி, வர்ணம் பூசுதல், வெள்ளை அடித்தல், அலங்கார மின் விளக்குகள் அமைத்தல், அருகில் உள்ள கட்டிடங்களை புதுப்பித்தல் மற்றும் சாரம் அமைத்தல் பணிகள், குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமரா அமைத்தல், உயர்கோபுரம் அமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்க்கு, பேராலய நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Tags:    

Similar News