உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவர்களிடம் குறைகளே கேட்டபோது எடுத்தபடம்.

குறைக்கேட்பு கூட்டத்தில் மக்கள் அளித்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

Published On 2023-05-23 10:51 IST   |   Update On 2023-05-23 10:51:00 IST
  • இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
  • இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இதில் பட்டா தொடர்பான 53 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 27 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 17 மனுக்களும், போலீஸ் துறை தொடர்பாக 41 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 15 மனுக்களும் மற்றும் இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதா ரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனி த்துணை கலெக்டர் கற்பகம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன், மாவட்ட வழங்கல் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News