உள்ளூர் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
- அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், திரவியம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்று, வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.