உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்

Published On 2023-02-01 09:30 GMT   |   Update On 2023-02-01 09:30 GMT
  • இன்று முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.
  • குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.

கோவை

கோவையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடை யாள அட்டை புதுப்பித்தல், தனித்து வமான அடையாள அட்டை பதிவு, மருத்துவ உபகரணங்கள் வழங்கல், அறுவை சிகிச்சைக்கு பயனாளிகள் தோ்வு உள்ளி ட்டவை மேற்கொ ள்ளப்படுகிறது.

எனவே மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் இம்முகாமை பயன்படுத்திகொள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

முகாம்கள் பேரூா் வட்டாரத்தில் குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்றும், கோவை மாநகா் வட்டாரத்தில் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 3-ந் தேதியும், கிணத்துக்கடவு வட்டாரத்தில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 -ந் தேதியும்,

பெரிய நாயக்கன்பாளையம் வட்டாரத்தில், நரசிம்ம நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 8-ந் தேதியும், அன்னூா் வட்டாரத்தில், அன்னூா் அமரா் எ.முத்துக்கவுண்டா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ந் தேதியும், காரமடை வட்டாரத்தில் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ந் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

சுல்தான்பேட்டை வட்டாரத்தில், சுல்தான்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் 13 -ந் தேதியும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 15 -ந் தேதியும் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 17-ந் தேதியும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 20-ந் தேதியும் ஆனைமலை வட்டாரத்தில், ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 22-ந் தேதியும் நடைபெறுகிறது.

சூலூா் வட்டாரத்தில் சூலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 23-ந் தேதியும், தொண்டாமுத்தூா் வட்டாரத்தில், தொண்டாமுத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24-ந் தேதியும், மதுக்கரை வட்டாரத்தில், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பிப்ரவரி 27-ந் தேதியும், வால்பாறை வட்டாரத்தில், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 28 -ந் தேதியும் நடைபெறுகிறது.

முகாம்கள் காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 4, ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Tags:    

Similar News