உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் அன்னப்பசாமி அருள்பாலிப்பு.
அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்
- பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் பூரணா, புஷ்களாம்பிகா சமேத அன்னப்பசாமி கோவில் அமைந்துள்ளது.
தை மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அன்னப்பசாமிக்கு பால், இளநீர், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.