குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்துக்கொன்ற மகன்
- திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
- கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குபதிவு செய்து அசன்அலியை கைது செய்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அத்திக்கடை அண்ணா தெருவை சேர்ந்தவர் அல்லா பிச்சை (வயது 60). இவரது மகன் அசன்அலி (வயது 37). இந்நிலையில் அல்லா பிச்சை குடிபோதையில் அருகில் குடியிரு ப்பவர்களி டம் தகராறு செய்தார். இதனை அசன்அலி தட்டி கேட்டுள்ளார்.
அப்போது தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டது. சண்டையில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டனர்.
அப்போது அல்லாபிச்சை சுவரில் மோதியுள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அல்லாபிச்சையை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அல்லாபிச்சை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக அல்லா பிச்சையின் மனைவி ஹபிப்நிஷா கொடுத்த புகாரி பேரில், கொரடாச்சே ரி இன்ஸ்பெ க்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து மகன் அசன்அலியை கைது செய்தார்.