உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் புதுவை மதுபானங்கள் கடத்தி விற்பனை

Published On 2022-06-21 09:21 GMT   |   Update On 2022-06-21 09:21 GMT
  • திண்டிவனத்தில் புதுவை மதுபானங்கள் கடத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • நகராட்சி பொதுக்கூட்ட மேடை சந்தில் புதுவை மதுபானத்தை புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்டு கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.

விழுப்புரம்:

திண்டிவனத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான நேரு வீதி, செஞ்சி பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் அதிகளவில் கிராமப்புறங்க–ளில் இருந்து வந்து கல்வி பயின்று செல்கின்றனர். இந்த பள்ளி அருகே கடந்த பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதனருகே நகராட்சி பொதுக்கூட்ட மேடை சந்தில் புதுவை மதுபானத்தை புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்டு கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.

இதுகுறித்து திண்டி வனம் போலீசாரிடம் பொது மக்கள் பல்வேறு முறை புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாருக்கு தெரிந்தே விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் புதுவையில் இருந்து கடத்தப்பட்டு மதுபானம் விற்கப்படு வதால் அருகே உள்ள டாஸ்மாக்குக்கு விற்பனை குறைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரி விக்கின்றனர்.

Tags:    

Similar News