உள்ளூர் செய்திகள்

வாலிபர்-முதியவர் தற்கொலை

Published On 2023-05-24 08:14 GMT   |   Update On 2023-05-24 08:14 GMT
  • வாலிபர், முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன்(23). இவரை 4 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அருண்பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் மித்ராவயல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(60).இவர் பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள கண்மாயில் ஏலம் எடுத்து மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News