உள்ளூர் செய்திகள்
ஆட்டோ தொழிலாளி குடும்பத்துக்கு நலவாரிய நிதி உதவி
- ஆட்டோ தொழிலாளி குடும்பத்துக்கு நலவாரிய நிதி உதவி வழங்கப்பட்டது.
- அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவர் சி.ஐ.டி.யு. உறுப்பினர் ஆவார். அவர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு நலவாரிய நிதி ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதுபற்றி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை. அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.