உள்ளூர் செய்திகள்
ரூ.1.69 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- சிவகங்கை அருகே சக்கந்தியில் ரூ.1.69 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சக்கந்தியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பல்வேறு துறைகளின் சார்பில் 288 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இதன் மூலம் பலதரப்பட்ட மக்கள் பயனடைகின்றனர்.
பொது மக்களுக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவல கத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தின் கடைகோடிவரை மக்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.