உள்ளூர் செய்திகள்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

Published On 2022-09-03 08:15 GMT   |   Update On 2022-09-03 08:15 GMT
  • ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்கப்பட்டது.
  • அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை மீனாதேவி நன்றி கூறினார்.

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ராஜராஜன் கல்விக்குழுமத்தின் ஆலோசகருமான சுப்பையா தலைமை தாங்கினார். சிறப்புவிருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டுக்கோட்டை கேம்பஸ் சிவில் துறைத்தலைவர்-ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி ஆங்கிலப்பேராசிரியர் அய்யாவு வாழ்த்துரை வழங்கினார். இதில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் மகாலிங்க, சுரேஷ், துறைத்தலைவர்களை அறிமுகம் செய்தார். அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர். பேராசிரியை மீனாதேவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News