உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் போராட்டத்தினால் சாலை ஓரங்களில் வெட்டப்பட்ட மண்ணை மீண்டும் அதே இடத்தில் பரப்பினர்.

சாலை அமைக்கும் பணிக்கு கிராவல் மண் திருட்டு

Published On 2022-10-13 08:28 GMT   |   Update On 2022-10-13 08:28 GMT
  • சங்கராபுரம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு கிராவல் மண் திருடுவதாக பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
  • மீண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார்.

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ். நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை14-வது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.33 லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கு தேவையான கிராவல் மண்ணை ஒப்பந்ததாரர் குவாரிகளில் வாங்கா மல் கே.கே.நகரில் கட்டப்பட்டு ள்ள குடிநீர்தொட்டி பணியில் மிஞ்சிய மண்ணை இரவு நேரங்களில திருட்டுத்தனமாக அள்ளி வந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், ஊராட்சி கவுன்சிலர் கணபதி மற்றும் அந்தப்பகுதி மக்கள் சாலைப்பணியை நடக்க விடாமல் நிறுத்தினர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மருங்கிப்பட்டி ரமேஷ் என்பவர் கூறுகையில், அரசுக்கு சொந்தமான கிராவல் மண்ணை திருடுவதோடு மட்டுமல்லாமல் சாலையின் இருபுறமும் எந்திரங்களால் மண்ணை வெட்டி ஓரங்கள் அமைக்கின்றனர்.

33 அடி சாலையில் 3 மீட்டர் மட்டுமே சாலை போடப்படுகிறது.ஓரங்களில் பள்ளமாக மண்ணை வெட்டி பயன்படுத்துவதால் சாலை குறுகிய சாலையாக மாறிவிடுகிறது.

மேலும் வீடுகளுக்கும், பிளாட்டுகளுக்கும் முன்புறம் கால்வாய் போல் ஆகிவிடுகிறது. சாலை பணிக்கு தேவையான மண்ணை ஒப்பந்ததாரர் விலைக்கு வாங்கி அதனை பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தலையிட்டு கிராவல் மண் திருட்டை தடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தாசில்தார் மாணிக்கவாசகம் கூறுகையில், பொதுமக்கள் தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் எச்ச ரிக்கை விடுத்துள்ளோம்.சாலையின் இருபுறமும் தோண்டிய மண்ணை பரப்பிவிட்டு சரிசெய்ய உத்தரவிட்டுள்ளேன். மீண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News