உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் புதிய கட்டமைப்பு பணிகள் ஆய்வு

Published On 2023-11-04 08:07 GMT   |   Update On 2023-11-04 08:07 GMT
  • சிவகங்கை ரெயில் நிலையத்தில் புதிய கட்டமைப்பு பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
  • அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கையில் கடந்த செப்.23-ந் தேதி 13 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தரக் கோரி நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி நகர்மன்ற தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்று மத்திய இணை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சிவகங்கை ரெயில் நிலை யத்தில் நடைபாதை லிப்ட் வசதி, டிஜிட்டல் போர்டு, கழிப்பறை வேலைகள் நடை பெற்று வருகின்றன. இதனை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், அயூப்கான், ராமதாஸ், சரவணன், விஜயகுமார், சண்முக ராஜன், மகேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Tags:    

Similar News