உள்ளூர் செய்திகள்
- சிங்கம்புணரி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம், மற்றும் ஸ்தானிகம் ரவிகுருக்கள் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தர்ம சம்வர்த்தினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வடுகபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதையொட்டி வடுக பைரவருக்கு ம்ருதுஞ்ஜய ஹோமம், கணபதி ஹோமம் சத்ரு சம்கார ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைப்பெற்றது.பின்னர் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிசேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு. பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம், மற்றும் ஸ்தானிகம் ரவிகுருக்கள் செய்திருந்தனர்.