உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் பேரூராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்து விட்டு வந்த பொதுமக்கள். 

குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

Published On 2022-06-30 08:30 GMT   |   Update On 2022-06-30 08:30 GMT
  • குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  • அந்த மின்மயான சுடுகாட்டை தெம்மாபட்டு பகுதிக்கு மாற்ற திட்டமிட்டனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அச்சுக்கட்டு பகுதியில் அமைந்துள்ள அரசு பொது மயானத்தில் ரூ.1.50 கோடி செலவில் மின் மயானம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மின்மயானம் அமைப்பதற்கு அந்த சுடுகாட்டை பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட சமூகத்தி னரிடம் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி ஆகியோர் உடனடியாக அந்த மின்மயான சுடுகாட்டை தெம்மாபட்டு பகுதிக்கு மாற்ற திட்டமிட்டனர்.

இதனையடுத்து அந்தப்பகுதியில் மின்மயானம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கும் எதிர்ப்பு கிளம்பவே, அந்த திட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது.

2 நாட்களுக்கு முன்பு தென்மாபட்டில் உள்ள மற்றொரு பகுதியில், அரசு பள்ளி மற்றும் குடிநீர் குளம் அருகில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மயானம் அமைக்கும் பணியை ஆரம்பித்தது.

இங்குள்ள மக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மின் மயா னத்தை பள்ளி அருகே அமைக்கக்கூடாது, வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு அளித்தனர். அப்போது செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், இது அரசு உத்தரவின் பேரில் கொண்டு வந்த திட்டம். நிச்சயமாக இந்த இடத்தில் மின்மயானம் அமைக்கப்படும் என்று தெரிவித்தாராம்.

மின் மயான திட்டத்திற்கு முதன்முதலாக எந்த இடத்தை தேர்வு செய்தீர்களோ அந்த இடத்தில் அமையுங்கள் என பொதுமக்கள் கூறவே, அங்கு விவாதம் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு சிவகங்கை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News