உள்ளூர் செய்திகள்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-10-11 08:00 GMT   |   Update On 2023-10-11 08:00 GMT
  • காரைக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
  • வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 3 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2-வது தனியார் வேலை வாய்ப்பு முகாம் காரைக்குடி யில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள வர்கள் உரிய ஆவணங்க ளுடன் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க உள்ள தனியார் துறை நிறுவனங்கள் https://b itly/svgempreg என்ற இணைப்பில் பதிவு செய்வது அவசியம்.

மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார் வேலைவாய்ப்பு இணை யத்திலும் பதிவு செய்யலாம். வேலைவாய்ப்பு தொடர் பான பல்வேறு தகவல் களை பெற SIVAGANGAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel—ல் இணைந்து பயன்பெற லாம். இம்முகாமில் வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் இந்த முகாமில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி சேர்க்கை விண்ணப்பம், திறன் பயிற்சி களுக்கான விண்ணப்பம், வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News