உள்ளூர் செய்திகள்
- மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷபூஜை நடந்தது.
வைகை ஆற்றுகரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் நந்திக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி பிரகாரம் வலம்வந்து தீபாராதனை நடந்தது.
சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திரமவுளீசுவரருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பரமக்குடி ரோட்டில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர் காசிநந்திக்கு மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.
மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், இடைக்காட்டூர் ஆழி மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில்களிலும் பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.