உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு

Published On 2023-05-22 08:57 GMT   |   Update On 2023-05-22 08:57 GMT
  • கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
  • டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் கிராமத்தில் மலை மருந்தீஸ்வரர்-முனிநாத சுவாமி கோவில்உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மிக்க மஞ்சுவிரட்டு நடை பெற்றது.

ஏரியூர் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராம மக்கள் ஏரி கண்மாயில் மீன்பிடி திருவிழாவும், அதனை தொடர்ந்து பாரம்பரியமிக்க மஞ்சு விரட்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் மஞ்சு விரட்டு போட்டி நேற்று மாலை நடந்தது.

முன்னதாக ஏரியூர், மயில்ராயன் கோட்டை, வலையபட்டி, கலிங்கப்பட்டி போன்ற 10-க்கு மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன. விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டு ஓடிய காளைகளை வீரத் தோடு திமிலைப் பிடித்து அடக்க முற்பட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News