உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2023-06-25 14:14 IST   |   Update On 2023-06-25 14:14:00 IST
  • மாணவ-மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
  • விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. போக்சோ சட்டம், 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கட்டாய கல்வி மற்றும் போதை பொருள் குறித்து முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், காரைக்குடி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் நிர்மலா நிவேதா, ஆசிரியர் பயிற்றுனர் கல்லல் வட்டார வளமையம் புலவலர் காளிராஜா, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை வக்கீல் கண்ணன், சமூக நல பாதுகாப்பு அலுவலர் சுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News