உள்ளூர் செய்திகள்
- கருப்பர் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
- அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் சூரக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நொண்டி கருப்பர் கோவிலில் கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, பூமி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, கணபதி பூஜை மற்றும் ஹோமங்களும் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், சிங்கம்புணரி நகர அவைத்தலைவர் காந்திமதி சிவா, ஆனந்த கிருஷ்ணன், சிங்கப்பூர் வாழ் எம்.எம்.எம் கன்ஸ்சக்சன் உரிமையாளர் மலைச்சாமி தமிழ்மணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.