உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

காளியம்மன் கோவில் திருவிழா

Published On 2022-07-23 13:54 IST   |   Update On 2022-07-23 13:54:00 IST
  • தேவகோட்டை அருகே உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.
  • 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பூசலாகுடி ஊராட்சி கொத்தங்குடி கிராமத்தில் இடையன் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு அபிஷேகம், ராமன் அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது.

பெண்கள் மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி தங்கள் குடும்பத்தில் நிகழ வேண்டும் என்று இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்த பூஜையில் தேவ கோட்டை, கண்ணங்குடி, களத்தூர், புதுவயல் மற்றும் கொத்தங்குடி கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு தீபாரதனை முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News