உள்ளூர் செய்திகள்
ஜெயலலிதா பிறந்தநாள் கைப்பந்து போட்டி
- ஜெயலலிதா பிறந்தநாள் கைப்பந்து போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
- அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் சந்தனமூர்த்தி ஏற்பாட்டில் காளை யார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் அரசு மேல்நி லைப்பள்ளி மைதானத்தில் கைபந்து போட்டி நடந்தது.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி ேபாட்டியை தொடங்கி வைத்தார்.
காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, ஸ்டீபன்அருள்சாமி, இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் மோசஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.