- திருப்புவனத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சோனைரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மனோன்மணி மதிவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலசந்தர், கிளைச் செயலாளர்கள் மணலூர் பிரபு, ராஜ், பீசர் பட்டினம் ராமசந்திரன், கீழடி சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி ஒன்றியத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலா ளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, நகர் செயலாளர் நாகுர்மீரா ஒன்றிய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஜெயல லிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மானாமதுரை ஒன்றி யத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் காளையார்கோவில் ஒன்றியத்தில் பஸ்நிலையம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை இணைச்செ யலாளர் மோசஸ், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை ஓ.பி.எஸ். அணி
சிவகங்கை அ.தி. மு.க., (ஓ.பன்னீர் செல்வம் அணி) சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு ஊர்வலமாக வந்து மலர்
தூவி மரியாதை செலுத்தி னர். நகர் செயலாளர் கே.வி., சேகர், மாவட்ட துணை செயலாளர் என்.எம்., ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் சுந்தரபாண்டியன், தொகுதி செயலாளர் நாக ராஜன், நகர் துணை செய லாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.