உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழில் நல்லுறவு விருது

Published On 2022-10-20 13:32 IST   |   Update On 2022-10-20 13:32:00 IST
  • தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

வேலையளிப்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து http://www.kdourtagoxin பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை: ஆணையர் (சமரசம்) அலுவலகம் வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழில்க பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 11.11.2022க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும். விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100/ம். வேலையளிப்பவரானால் ரூ.250/ம் கீழ்காணும் கணக்குத்தலைப்பின் கீழ் https:/www.karuvoolam.tn.gov.in/challanv/echallan வலைதளத்தில் tchallan மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு(challam) வைத்து அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News