உள்ளூர் செய்திகள்

நியாய விலை கடை திறப்பு விழா

Published On 2022-10-05 09:03 GMT   |   Update On 2022-10-05 09:03 GMT
  • சிங்கம்புணரி தாலுகா எஸ்.மாத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.
  • இதில் கூட்டுறவு சங்கத் தலைவர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.மாத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா சதாசிவம் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி யூனியன் ஆணையாளர் லட்சுமணன் ராஜ் முன்னிலை வகித்து கடையை திறந்து வைத்தார். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் துரைப்பாண்டியன், துணைத் தலைவர் ஜானகிராமன், வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் செல்வம், மன்ற துணைத் தலைவர் மனோகரன், நியாயவிலைக் கடை மேலாளர் சங்கர் மற்றும் கவுன்சிலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கிராம மக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News