உள்ளூர் செய்திகள்
- வீடு புகுந்து பணம் திருடப்பட்டிருந்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கேப்பார்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தமேரி. இவர் வெளிேய சென்று திரும்பி வந்த போது முன்கதவு திறந்து கிடந்தது. கதவில் இருந்த பூட்டு உடைக்ககப்பட்டி ருந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.19 ஆயிரம் காணாமல் போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் முன்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வசந்தமேரி மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.