உள்ளூர் செய்திகள்

அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்

Published On 2023-04-28 13:31 IST   |   Update On 2023-04-28 13:31:00 IST
  • அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
  • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சியில் தொழிலாளர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலைத் திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024, தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் திட்டம், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை சார், சாரா வாழ்வாதார இயக்கம் மற்றும் வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளன.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News