உள்ளூர் செய்திகள்

அரசுத்துறை புகைப்பட கண்காட்சி

Published On 2022-07-24 06:59 GMT   |   Update On 2022-07-24 06:59 GMT
  • மானாமதுரை அருகே அரசுத்துறை புகைப்பட கண்காட்சி நடந்தது.
  • அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், எம்.கரிசல்குளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடந்தது.

இதில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News