உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2022-08-20 13:45 IST   |   Update On 2022-08-20 14:48:00 IST
  • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது.
  • அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News