உள்ளூர் செய்திகள்

கல்வி கடன் முகாம்

Published On 2023-08-19 08:36 GMT   |   Update On 2023-08-19 08:36 GMT
  • வங்கிகளின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் முகாம் நடக்கிறது.
  • கலெக்டர் ஆஷா அஜித் தெரிவி்த்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெரும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (DDC HALL) அடுத்த மாதம் 5-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களு டைய விண்ணப் பத்தினை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 தற்போதைய புகைப்படம், வங்கி பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப் பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து மாணாக்கர்களுக்கு உடனடி கடன் ஆணைகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மாணாக்கர்கள் பயன்படுத்திக்ககொண்டு , இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News