உள்ளூர் செய்திகள்

மருத்துவர்கள் தின குடும்ப விழா

Published On 2022-08-03 08:54 GMT   |   Update On 2022-08-03 08:54 GMT
  • காரைக்குடியில் மருத்துவர்கள் தின குடும்ப விழா நடந்தது.
  • இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை சார்பில் நடந்தது.

காரைக்குடி

இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை சார்பில் மருத்துவர்கள் குடும்ப விழா காரைக்குடியில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கி மருத்துவதுறையில் சிறப்பாக பணிபுரிந்து கொண்டிருக்கும் 33 மூத்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ஜெயலால், கனக சபாபதி, சிங்காரவேல், ஸ்ரீதர், ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி கிளை சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை சுற்றுவட்டார பகுதிகளில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் நட முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக முதல் மரக்கன்றை இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை தலைவர் சந்திரமோகன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் வழங்கினார்.காரைக்குடி கே.எம்.சி கிளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News